April 27, 2024

Tamil

நேரலை செய்திகள் புதுப்பிப்புகள்

  • CWC சீசன் 5 : நடுவராக வரும் அளவிற்கு அவரிடம் திறமை இருக்கா? மாதம்பட்டி ரங்கராஜ் லேசுப்பட்ட ஆளில்லை தெரியுமா?
    on April 27, 2024 at 5:52 am

    இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் மிகவும் பிரபலமாக சமூக ஊடகங்கள் துணையாக நிற்கிறது, ஆனால் சமூக ஊடகங்கள் வழி உச்சத்தை தொடும் அனைவரும் உரிய திறமை உள்ளவர்களா? என்று கேட்டால் நிச்சயம் அது கேள்விக்குரிய ஒரு விஷயமே. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து வரும் ஒருவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.  இன்று ஒரு மிகப்பெரிய செலிபிரிட்டி வீட்டு விசேஷமாக இருந்தால் போதும், அதில் சமையல் நிச்சயம் மாதம்பட்டி ரங்கராஜாக தான் இருப்பார். அந்த அளவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரின் இல்ல விழாக்களுக்கு மிகச் சிறந்த முறையில் உணவு தயாரித்து தந்து வருகின்றார் அவர். இந்த சூழ்நிலையில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் அவர் நடுவராக களம் இறங்குகிறார்.  Pan India : பிரபாஸின் கல்கி 2898 AD முதல்.. Jr. NTRன் தேவாரா வரை – Box Officeல் வேட்டை நடத்த வரும் மூவிஸ்! மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை காட்டிலும், ஒரு சமையல் நிகழ்ச்சிக்கு நடுவராக வரும் அளவிற்கு திறமை உள்ளவரா? என்ற கேள்வி இணையத்தில் எழுந்து வருகிறது.  சரி யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?  கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “மெஹந்தி சர்க்கஸ்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கிய மாதம்பட்டி ரங்கராஜ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான “பென்குயின்” திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அட நடிகரா இவர், அப்போது நிச்சயம் பிரபலமானத்தில் தவறில்லை என்று நினைத்தால் அது தான் தவறு.. ரங்கராஜ் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இப்பொது 41 வயதாகும் அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் பயணித்து வருகின்றார்.  சமையல் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்த போதும் பெற்றோரின் வலியுறுத்தலின் காரணமாக பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றார். ஆனால் அதில் அவருக்கு பெரிய நாட்டம் இல்லாத நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1999ம் தனது குடும்ப தொழிலை எடுத்து நடத்த தொடங்கினார். முதல் முதலில் பெங்களூருவில் தனது உணவகத்தை துவங்கியுள்ளார்.  பின் சிறு சிறு நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் உலகத்தில் பயணித்து இன்று மாபெரும் செலிபிரிட்டி குக் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி என்ற அவரது நிறுவனம் பல்வேறு நிகழ்வுகளில் சமைத்து அசத்தியுள்ளார்.  ஆகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த புதிய சீசனில் அவர் நடுவராக பங்கேற்க முழுமையான தகுதி பெற்றவர் என்றே கூறலாம். இது மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. Vikram 62 : ஆரமிக்கலாங்களா.. ரெடி ஜூட் சொன்ன சீயான் – விறுவிறுப்பாக துவங்கிய “வீர தீர சூரன்” – வைரல் வீடியோ!

  • பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்திய இதயம்; நடந்தது என்ன?
    on April 27, 2024 at 5:49 am

    2019 ஆம் ஆண்டு கராச்சியில் இதய நோய் காரணமாக ஆயிஷாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு சிகிச்சைக்காக, அவர் சென்னை வந்தார். எனினும். அவர் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் சென்னைக்கு வந்தார். சிகிச்சை கட்டாயம் என்ற நிலை இருந்த போதிலும்,, ஆயிஷா கணிசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். அவரின் அவலநிலையை உணர்ந்த, சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இதய மாற்று அறுவை சிகிச்சையின் தலைவரான டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் உதவி வழங்க முன்வந்தார். சென்னையை ஐஸ்வர்யம் என்ற ஹெல்த்கேர் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து ஆயிஷாவுக்கு உதவியது.  ஜனவரி 31, 2024 அன்று, டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரு இதயம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது, ஆயிஷாவின் உயிர் காக்கும் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.  இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இயந்திர சுழற்சி ஆதரவு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், இதுகுறித்து பேசி போது “ ” முதன்முதலில் 2019 இல் எங்களிடம் ஆயிஷா சிகிச்சைக்கு வந்தார். ஆனால், அவள் வந்தவுடன் அவளுடைய இதயம் நின்றுவிட்டது. நாங்கள் CPR செய்து செயற்கை இதய பம்ப் போட வேண்டியிருந்தது. இதன் மூலம் அவள் குணமடைந்து பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்றாள். பின்னர் ஆயிஷாவுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவளுடைய இதய செயலிழப்பு மோசமடைந்தது. மேலும் அவளுக்கு மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது, ஆனால் பாகிஸ்தானில் அது அவ்வளவு எளிதாக இல்லை. ஏனென்றால் தேவையான உபகரணங்கள் இல்லை, அவர்களிடம் பணமும் இல்லை” தெரிவித்தார். “நாங்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மிகப்பெரிய மையம். நாங்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 100 இதய மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். மேலும் இந்தியர்கள் இல்லை என்றால், அது வெளிநாட்டவருக்கு ஒதுக்கப்படும். இந்த சூழ்நிலையில், இந்தப் பெண் கிட்டத்தட்ட பத்து மாதங்களாகக் காத்திருந்தாள். அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் தான் அவளுக்கு இதயம் கிடைத்தது. இதை தொடர்ந்து அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது” என்று தெரிவித்தார். எதிர்காலத்தில் ஆடை வடிவமைப்பாளராக ஆசைப்படும் ஆயிஷா ரஷீத், இந்திய அரசுக்கும், தனது மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து, எதிர்காலத்தில் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகத் தெரிவித்தார்.இதுகுறித்து பேசிய அவர் “ எனக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்திய அரசாங்கத்திற்கு நன்றி, நான் நிச்சயமாக மீண்டும் ஒரு நாள் இந்தியா திரும்புவேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி,” கூறினார். ஆயிஷாவின் தாயார் சனோபர், இந்தியாவில் தனது மகளின் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் “எனது மகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மகளுக்கு 12 வயது இருக்கும் போது அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது, பின்னர் கார்டியோ எம்பதிக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவளை உயிருடன் வைத்திருக்க ஒரே தீர்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் பாக்கிஸ்தானில் மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் இல்லை என்பதை அறிந்தேன், அதனால் எனது மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம், ஆனால் மருத்துவர்கள் என்னை நம்பி இந்தியாவுக்குப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். நான் பணம் இல்லாமல் இந்தியா வந்தேன். டாக்டர் பாலகிருஷ்ணன் எனக்கு எல்லா வகையிலும் உதவினார். மாற்று அறுவை சிகிச்சைக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு பாகிஸ்தான் பெண்ணுக்குள் ஒரு இந்திய இதயம் துடிக்கிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. இது ஒருபோதும் சாத்தியமில்லை என்று நான் நினைத்தேன், ஆனால் அது நடந்தது” என்று தெரிவித்தார்.  

  • யாராவது பந்து வீச்சாளர்களை காப்பாற்றுங்கள் – கேகேஆர் பவுலர்களுக்காக பரிதாப்பட்ட அஸ்வின்!
    on April 27, 2024 at 5:40 am

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அதிரடியாக விளையாடி 18.4 ஓவர்களில் 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், யாராவது பந்து வீச்சாளர்களை காப்பாற்றுங்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 42ஆவது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக 71 ரன்களும், பிலிப் சால்ட் 75 ரன்களும் எடுத்தனர். வெங்கடேஷ் ஐயர் 39, ஆண்ட்ரே ரஸல் 24, ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்ட்வோ இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். பிராப்சிம்ரன் சிங் 54 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். ரிலீ ரோஸோவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஷஷாங்க் சிங் இருவரும் கடைசி வரை அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க, பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் தான், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யாராவது பந்து வீச்சாளர்களை காப்பாற்றுங்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • கேட்டது 38,000 கோடி! கொடுத்தது 275 கோடி! பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல! வன்மம்! சு.வெங்கடேசன்!
    on April 27, 2024 at 5:27 am

    கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 3454 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே வழங்கியதற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல், கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 வட மாவட்டங்களும், டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினரும் ஆய்வு செய்தனர். இந்த இரு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு, நிவாரண பணிக்காக 4 வட மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடி, 4 தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடி என மொத்தம் ரூ.37,907.21 கோடி நிவாரண தொகை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. ஆனால், வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால், வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு, நிதி ஒதுக்காமல் தமிழகத்தை புறக்கணிப்பதாக திமுக திமுக குற்றம்சாட்டி வந்தது.  இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.275 கோடியும், கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வறட்சி வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடியை மத்திய அரசுஒதுக்கீடு செய்துள்ளது.  மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று, கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை மத்திய அரசு செய்வதாக  சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில்: கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல… வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு. கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல… வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம்.தீராத… pic.twitter.com/4IpZXjvMD9— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 27, 2024 தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என குறிப்பிட்டுள்ளார். 

  • Aloe Vera Juice : கற்றாழை ஜூஸில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியத்தின் ரகசியம்.. தினமும் குடிச்சா எத்தனை நன்மைகளா..?
    on April 27, 2024 at 5:18 am

    இந்த பதிவில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோ கற்றாழை எல்லாருடைய வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு பொதுவான செடியாகும். இந்த செடியானது, சருமம் மற்றும் கூந்தலின் அழகை பராமரிக்க பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, இது பழங்காலத்திலிருந்தே மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  கற்றாழையில் ஏ, சி, ஈ, பி போன்ற வைட்டமின்களும்; கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கற்றாழை ஜூஸ் குடித்தால், ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். ஆனால் சிலருக்கு அது தெரிவதில்லை. அவர்களுக்கான பதிவுதான் இது..சரி வாங்க..இப்போது  கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: உடல் எடையை குறைக்கும்: கற்றாழை ஜூஸ் நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுப்பதால், உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். ஆகையால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ஜூஸ் சிறந்த தேர்வாகும். செரிமான பிரச்சனைகள் நீங்கும்: கற்றாழையில் உள்ள நொதிகள் மற்றும் நார்ச்சத்துகள் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது. இதனால் வயிறு சுத்தமாக செரிமான பிரச்சனைகள் நீங்குகிறது. முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது: கற்றாழை ஜூஸ் குடித்தால், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். இதனால், சருமம் பளபளப்பது மட்டுமின்றி, முடி கொட்டும் பிரச்சனையும் நீங்கும். இதையும் படிங்க: நீங்கள் சீக்கிரம் பணக்காரராக ‘இந்த’ செடியை உடனே வீட்டில் நடுங்கள்..! நச்சுக்களை நீக்கும்: நொறுக்குத் தீனி உள்ளிட்ட பிற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நச்சுகள் சேரும். கற்றாழை ஜூஸ், இந்த நச்சு கூறுகளை நீக்கி, உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இதையும் படிங்க: Aloe Vera Vastu Tips : அதிர்ஷ்டம், செல்வம் பெறுக வீட்டில்  கற்றாழையை ‘இந்த’ திசையில் வையுங்கள்!! பல் ஆரோக்கியத்திற்கு நல்லது: கற்றாழை ஜூஸ் குடித்தால், வாய் துர்நாற்றத்தை குறைப்பது மட்டுமின்றி, ஈறுகள் மற்றும் பற்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: கற்றாழை ஜூஸ் தினமும் குடித்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். வீக்கத்தைக் குறைக்கும்: கற்றாழை ஜூஸ் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் இது குடல் நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

  • Vikram 62 : ஆரமிக்கலாங்களா.. ரெடி ஜூட் சொன்ன சீயான் – விறுவிறுப்பாக துவங்கிய “வீர தீர சூரன்” – வைரல் வீடியோ!
    on April 27, 2024 at 5:07 am

    தமிழ் திரையுலகில் ஒரு குட்டி கமலஹாசன் என்று போற்றப்படும் ஒரு மாபெரும் நடிகர் தான் சீயான் விக்ரம். தன்னுடைய திரைப்படத்திற்காக தன் உடலை எந்த ஒரு உச்சத்திற்கும் எடுத்து சென்று மாற்றி அமைக்கும் ஒரு வல்லமை கொண்ட வெகு சில நடிகர்களில் ஒருவர் விக்ரம். தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்ற தொடங்கி, இயக்குனர் பாலாவின் “சேது” என்கின்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தவர். இன்று ரசிகர்கள் அனைவரும் சீயான் என்று அன்போடு அழைக்கும் ஒரு மிகச்சிறந்த நடிகராக உருவெடுத்துள்ள விக்ரம். விரைவில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கியுள்ள தங்கலான் திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், அண்மையில் விக்ரமின் 62வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தமிழ் திரை உலகில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “பண்ணையாரும் பத்மினியும்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கிய எஸ்.யு அருண்குமார் அதன் படத்தை இயக்குகிறார்.  Cheran : சேரன் மகளின் திருமணம்.. மனக்கசப்பை மறந்து வாழ்த்திய பார்த்திபன் – சேரன் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா? எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். அண்மையில் இந்த திரைப்படத்தின் பெயர் “வீர தீர சூரன்” என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள நிலையில், முதலில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும், அதன் பிறகு அதன் Perquel வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  Ready ஜூட்?? 🔥#VeeraDheeraSooran pic.twitter.com/kcpbKpYoIY — Vikram (@chiyaan) April 26, 2024 இந்நிலையில் நேற்று மதுரையில் இப்பட பணிகள் துவங்கியுள்ளது, அந்த வீடியோவை விக்ரம் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய ரசிகர்கள் அந்த வீடியோவை வேற லெவலில் ட்ரெண்டாகி வருகின்றனர்.  Pan India : பிரபாஸின் கல்கி 2898 AD முதல்.. Jr. NTRன் தேவாரா வரை – Box Officeல் வேட்டை நடத்த வரும் மூவிஸ்!

  • Crime: 20 இடங்களில் வெட்டு காயம்; மதுரையில் பட்ட பகலில் இளைஞர் படுகொலை
    on April 27, 2024 at 5:07 am

    மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த அருள்முருகன் (வயது 29). மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 1 மனைவி, 1 குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அருள்முருகன் நேற்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்குவந்த மர்ம கும்பல் ஒன்று அருள்முருகனை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்னர்.  முட்டை தோசை கேட்ட கணவர்.. கடைக்கு வாங்க சென்ற மனைவி.. சைடு கேப்பில் ரவுடியை கொத்துக்கரி போட்ட கும்பல்! மேலும் அருள்முருகனின் கையை தனியாக வெட்டியதோடு முகத்தில் 20க்கும் மேற்பட்ட முறை வெட்டி முகத்தை சிதைத்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக அருள்முருகன் உயிரிழந்த நிலையில் அங்கு வந்த கூடல்புதூர் காவல்துறையினர் அருள்முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர். #BREAKING: சினிமா பாணியில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. 20 பேர் படுகாயம்..! காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், மதுரை விரகனூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்மேடு பகுதியைச் சேர்ந்த அருள்முருகனின் உறவினரான நவநீதன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்கு பழியாக நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நவநீதனின் பெரியம்மா மகன்  அருள்முருகன் என்பது குறிப்பிடதக்கது.

  • முட்டை தோசை கேட்ட கணவர்.. கடைக்கு வாங்க சென்ற மனைவி.. சைடு கேப்பில் ரவுடியை கொத்துக்கரி போட்ட கும்பல்!
    on April 27, 2024 at 4:46 am

    சென்னையில் மனைவி கடைக்கு சென்று முட்டை வாங்கி வருவதற்குள் 8 பேர் கொண்ட கும்பலால் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வருபவர் ரவுடி லொட்டை என்ற ஆனந்த்(29). இவரது மனைவி ரோஜா. தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மனைவியிடம் ரவுடி ஆனந்த் முட்டை தோசை கேட்டுள்ளார். கணவர் முட்டை தோசை கேட்டதை அடுத்து கடைக்கு சென்று முட்டை வாங்கி வர மனைவி சென்றுள்ளார். இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிக்குள் புகுந்து ஆனந்தை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியுள்ளனர்.  இதையும் படிங்க: என்னை பார்த்து குழந்தை பெத்துக்க முடியாதவன் என தந்தை திட்டியதால் கொன்றேன்.. மகன் பகீர் வாக்குமூலம்! இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடி ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. கடைக்கு சென்ற மனைவி வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இதையும் படிங்க:  சொத்துக்காக பாக்ஸிங்கில் குத்துவது போல தந்தையின் முகத்தில் கொடூர தாக்குதல்! பகீர் வீடியோ! வசமாக சிக்கிய மகன்! இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிக்கலாம் என கூறப்பட்டுகிறது. மேலும், தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரவுடி ஆனந்தின் சகோதரர் சுரேஷை கடந்த ஜனவரி மாதம் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரவுடி கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. 

  • Pan India : பிரபாஸின் கல்கி 2898 AD முதல்.. Jr. NTRன் தேவாரா வரை – Box Officeல் வேட்டை நடத்த வரும் மூவிஸ்!
    on April 27, 2024 at 4:41 am

    பிரபாஸின் Kalki 2898 AD : மிக பெரிய தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் படம் தான் கல்கி 2898 AD. எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் மூத்த நடிகர்கள் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்து  வருகின்றனர். இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேஜா சஜ்ஜாவின் Mirai : “ஹனு மேன்” படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா தனது அடுத்த முயற்சியான “மிராய் – சூப்பர் யோதா” மூலம் பார்வையாளர்களை திகைக்க வைக்க வருகின்றார். தேஜாவின் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொண்ட மற்றொரு த்ரில்லான சூப்பர் ஹீரோ கதைக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Cheran : சேரன் மகளின் திருமணம்.. மனக்கசப்பை மறந்து வாழ்த்திய பார்த்திபன் – சேரன் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா? அல்லு அர்ஜுனின் Pushpa 2 : “புஷ்பா” படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, “புஷ்பா 2” க்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் மீண்டும் நடிக்கும் நிலையில், இன்னொரு அதிரடி நடிப்புக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அண்மையில் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது. ராம் சரணின் Game Changer : அரசியல் களத்தை புரட்டிப்போடும் ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகி வருகின்றது சங்கரின் “கேம் சேஞ்சர்”. நடிப்பின் அடிப்படையில் ராம் சரணுக்கு ஒரு கேம் சேஞ்சராக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படமும் Game Changer படமும் இவ்வாண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. என்டிஆர் ஜூனியரின் Devara : காலப் பின்னணியில் அமைக்கப்பட்ட, “தேவரா” மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாகும். இது நடிகராக ஜூனியரின் பன்முகத் திறனைக் காட்டுகிறது. காதல், வீரம், தியாகம் ஆகியவற்றின் இந்த காவியக் கதைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படமும் எதிர்வரும் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ளது. Sakshi : விதவிதமான ஆடையில் சிக்கென்ற போஸ்.. ரசிகர்களை இம்சிக்கும் சாக்ஷி அகர்வால் – லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

  • Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை அன்று ‘இத’ மட்டும் செய்யுங்கள்.. வருடம் முழுவதும் செழிப்பு தான்!
    on April 27, 2024 at 4:28 am

    அட்சய திருதியை இந்தியாவில், இந்து மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் இந்த பண்டிகை இந்த 2024 ஆண்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. உங்களுக்கு தெரியுமா.. அட்சய திருதியை நாளில் நீங்கள் எதைச் செய்தாலும், அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதற்கான பலன்vஎதிர்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும்; அதுவும் பத்து மடங்காக என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆகையால், அந்த நாளில் நீங்கள் எதைச் செய்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரி வாங்க.. இப்போது உங்களுக்காக..vஅட்சய திருதியை நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்று இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.. இதையும் படிங்க: அக்ஷ்ய திருதி 2023: அக்ஷய திரிதியின் முக்கியத்துவம் என்ன? வீட்டில் பூஜை செய்வது எப்படி? விவரம் இதோ!! 2024 அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை: தங்கம் வாங்குங்கள்: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது வழக்கமாகிவிட்டது. ஏனெனில், இந்நாளில் தங்கம் வாங்கினால், வருடம் முழுவதும் அதிஷ்டத்தையும், செல்வத்தையும் கொடுப்பதாக நம்பிக்கை. மேலும், உங்கள் வீட்டில் பொருளாதார நல்வாழ்வும் கிடைக்கும். எனவே, இதற்கு முன் இந்நாளில் நீங்கள் தங்கம் வாங்கவில்லை என்றால் இந்த ஆண்டு கண்டிப்பாக  வாங்குங்கள்.  வாகனம் வாங்கலாம்: அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமின்றி, கார் அல்லது மோட்டார் பைக் போன்றவற்றையும் வாங்கலாம். அந்நாளில், வாகனம் வாங்கினால், பாதுகாப்பாக பயணிப்பதை மற்றும் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. மேலும் இந்நாளில் வாகனத்திற்கான சலுகைகள் இருப்பதால், நீங்கள்  வாகனம் வாங்க நினைத்தால், இந்நாளில், வாகனம் வாங்குவது நல்லது. புதிய வீடு வாங்கலாம்: அட்சய திருதியை அன்று புதிய வீடு வாங்குவது உகந்ததாகக் கருதப்படுகிறது. நீங்கள் புதிய வீடு வாங்க விரும்பினால், அந்நாள் சிறப்பான நாளாகும். இதனால் தம்பதிகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள். அதுபோல, அந்நாளில் வீடு கிரஹ பிரவேஷம் செய்தால், தீய சக்திகள் விரட்டப்பட்டு, வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும். புதிய தொடக்கம்: நீங்கள் புதிதாக ஏதேனும் தொழில் தொடங்க விரும்பினாலோ அல்லது நீங்கள் விரும்பும் வாழ்க்கை தொடர்பான விஷங்கள் போன்றவை செய்ய அந்நாள் உகந்தது. அந்த நாளில், நீங்கள் செய்யும் எந்த புதிய தொடக்கமும் எதிர்காலத்தில் உங்களுக்கு செழிப்பைக் கொடுக்கும். இதையும் படிங்க: அட்சய திருதியை 2024: எப்போது..? தங்கம் வாங்க நல்ல நேரம் எப்போது தெரியுமா..?  2024 அட்சய திருதியை அன்று செய்யக்கூடாதவை: கோபம் வேண்டாம்: அட்சய திருதியை நாள் நல்ல நாளாக கருதப்படுகிறது. அந்நாள் நல்ல செயல்களை செய்வதற்கான நாள் என்பதால், யாருடைய மனதையும் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள். மேலும் அந்த நாளில் யாரிடமும் கசப்பானதாக பேசவோ அல்லது கோபம் கொள்ளவோ வேண்டாம். இதனால் லட்சுமி தேவி வருத்தப்படுத்தலாம்.  வீடு இருட்டாக இருக்க கூடாது: அட்சய திருதியை நாளில் வீட்டை ஒருபோதும் இருட்டாக வைக்க கூடாது. ஒருவேளை வீட்டில் ஏதாவது ஒரு பகுதி இருட்டாக  இருந்தால், உடனடியாக விளக்கு ஏற்றிவிடுங்கள். வீடு இருளாக இருந்தால், லட்சுமி தேவியின் அருள் வீட்டில் இருக்காது. ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

  • Today Gold Rate in Chennai: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்! கிடுகிடுவென எகிறும் விலை! நகைப்பிரியர்கள் ஷாக்!
    on April 27, 2024 at 4:11 am

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம். தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,755-க்கு விற்பனையானது. Gold Rate in Tamilnadu இன்றைய (ஏப்ரல் 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.54,160-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,770-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,240ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,920-ஆக விற்பனையாகிறது.  வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.87.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.87,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • டி.கே. சிவக்குமாரின் மகள் அரசியலில் நுழைகிறாரா? யார் இந்த ஐஸ்வர்யா ஹெக்டே?
    on April 27, 2024 at 4:10 am

    கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே சிவகுமார். கடந்த ஆண்டு அங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் பெரும் பங்கு சிவகுமாருக்கு உண்டு. கர்நாடக முதல்வர் பதவிக்கு டி.கே. சிவகுமார் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது கர்நாடகத்தின் துணை முதலமைச்சராக டி.கே சிவகுமார் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகவும் டி.கே சிவகுமார் அறியப்படுகிறார். கட்சிக்குள் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அவர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து, சமரசம் செய்து பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைக்கிறார்.  ஜம்முவின் ரம்பனில் மூழ்கிய நிலம்.. வீடுகளில் ஏற்பட்ட விரிசல்.. சாலை இணைப்பு துண்டிப்பு..! இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் நேற்று முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு நேற்ரு தேர்தல் நடந்தது. இதில் பெங்களூரு புறநகர் தொகுதியில் சிட்டிங் எம்.பியாக இருக்கும் டி.கே சிவகுமாரின் தம்பி, டி.கே சுரேஷ் மீண்டும் களமிறங்கி உள்ளார். பெங்களூரு புறநகர், பெங்களூரு வடக்கு உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் நேற்று டி.கே சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா பெங்களூருவில் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “எனக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லை. நான் ஒரு கல்வியாளர், அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவை பெருமைப்படுத்த ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற வேண்டும், நான் இப்போது தேவைப்படும் துறையில் பணியாற்றி வருகிறேன்.” என்று தெரிவித்தார் “இது இன்று நாட்டைப் பற்றியது. நாடு வளர்ந்தால் நானோ அல்லது வேறு எந்த மனிதனோ வளர முடியும். இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஜூன் 4 ஆம் தேதி என் சித்தாவுடன் வெற்றியை கொண்டாடுவேன் என்று நான் மிகவும் நம்புகிறேன்.” என்று கூறினார்.முன்னதாக டி.கே சிவகுமாரின் மகள் அரசியலில் நுழையலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தான் அரசியலில் நுழையப் போவதில்லை என்று ஐஸ்வர்யா விளக்கமளித்துள்ளார்.  லோக்சபா தேர்தல் 2024: 60.96% வாக்குகள் பதிவு.. மாநில வாரியான விவரங்கள்.. முழு விபரம் இதோ !! டி.கே சிவக்குமாருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா, இவர் அமர்த்தியா ஹெக்டே என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மறைந்த கஃபே காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தாவின் மகன் தான் அமர்த்தியா ஹெக்டே. மேலும் அமர்த்தியாவின் தாத்தா (தாய் வழி தாத்தா)_ எஸ்எம் கிருஷ்ணா ஆவார். இவர் கர்நாடகாவின் முன்னாள் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கேகேஆரை பதம் பார்த்த கத்துக்குட்டி பஞ்சாப் கிங்ஸ் – சாதனை மேல் சாதனை!
    on April 27, 2024 at 3:57 am

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 42ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 42ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 138 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 32 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நரைனைத் தொடர்ந்து பிலிப் சால்ட்டும் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 39 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் வெளியேறினார். கடைசியில் வந்த ரிங்கு சிங் 5, ரமன்தீப் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், சாம் கரண் மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் கேகேஆர் 2ஆவது முறையாக 250 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 272/7 ரன்கள் குவித்தது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்கள் அடித்ததைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கேகேஆர் 18 சிக்ஸர்கள் விளாசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது இவ்வளவு பெரிய ஸ்கோரை எப்படி எட்டும் என்று ஒவ்வொருவரும் மனதில் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிர்மாறாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது. பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கினர். பஞ்சாப் கிங்ஸ் 3.3 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. இதில், பிராப்சிம்ரன் சிங் மட்டும் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள்: 14 – கேஎல் ராகுல் vs DC, மொஹாலி, 2018 17 – நிக்கோலஸ் பூரன் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், 2020 18 – பிராப்சிம்ரன் சிங் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, 2024 19 – டேவிட் மில்லர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சார்ஜா, 2014 19 – கேஎல் ராகுல் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மொஹாலி, 2019 அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பிராப்சிம்ரன் 20 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் 6 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ரிலீ ரோஸோவ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஷஷாங்க் சிங் களமிறங்கினார். ஷஷாங்க் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாச கொல்கத்தா பவுலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் ஒரு விக்கெட் இழந்து 132 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் குவித்தது. இதுவே பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதன் பிறகு 15 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. 16ஆவது ஓவரிலேயே 9 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில், ஜானி பேர்ஸ்டோவ் 45 பந்துகளில் சதம் விளாசினார். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிவேகமாக சதம் விளாசியவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியல்: 38 – டேவிட் மில்லர் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மொஹாலி, 2013 45 – மாயங்க் அகர்வால் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சார்ஜா, 2020 45 – ஜானி பேர்ஸ்டோவ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, 2024 49 – விருத்திமான் சகா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு, 2014 final அடுத்த ஓவரில் 17 ரன்கள் குவித்த பஞ்சாப் கிங்ஸ் 18 ஆவது ஓவரில், 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி உள்பட 25 ரன்கள் குவித்தது. கடைசி 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பஞ்சாப் விளையாடியது. ஆனால், அடுத்த 4 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 262/2 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 8 பந்துகள் எஞ்சிய நிலையில் டி20 கிரிக்கெட்டில் 262 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

  • Sakshi : விதவிதமான ஆடையில் சிக்கென்ற போஸ்.. ரசிகர்களை இம்சிக்கும் சாக்ஷி அகர்வால் – லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
    on April 27, 2024 at 3:43 am

    Actress Sakshi Agarwal : உத்தரகாண்டில் பிறந்த பிரபல நடிகை சாக்ஷி அகர்வால், மெகா ஹிட் இயக்குனர் அட்லியின் “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மொழியை தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். Cheran : சேரன் மகளின் திருமணம்.. மனக்கசப்பை மறந்து வாழ்த்திய பார்த்திபன் – சேரன் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா? கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்து வந்தாலும், இன்னும் நாயகியாக சாக்ஷி அகர்வால் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் எதிர்வரும் வருடங்களில் வெளியாகும் படங்களில் அவர் நாயகியாக நடிக்க உள்ளார். தமிழில் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் “பகீரா” என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தார் அவர். தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகும் பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், நாயகியாகவும் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பேரழகி.. சௌந்தர்யாவின் க்யூட் போட்டோ..

  • Personal Loan : பெர்சனல் லோன் வாங்கப் போறீங்களா? ஜாக்கிரதையா இருங்க.. சிரமங்களை சந்திக்க நேரலாம்..
    on April 27, 2024 at 3:22 am

    தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்ற பல தனிப்பட்ட செலவுகளுக்கு கையில் பணம் இல்லை என்றாலும், நடுத்தர மக்களுக்கு தோன்றும் ஒரே வழி வங்கியில் கடன் வாங்குவது. குறிப்பாக பெர்சனல் லோன் என்று அழைக்கப்படும் தனிநபர் கடனை வாங்கி பலரும் தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். பின்னர் ஒவ்வொரு மாதம் இஎம்ஐ செலுத்தி தங்கள் கடனை அடைத்து வருகின்றனர். ஆனால் தனிநபர் கடனைப் பெறுவதற்கு முன், சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர், கிரெடிட் ஸ்கோர், வயது, வருமானம், தொழில், நிறுவனத்தின் சுயவிவரம் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் சம்பளம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருந்தால், வங்கி உங்களுக்கு தனிப்பட்ட கடன் வழங்கும். உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. 60 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு கடன் வழங்க வங்கிகள் ஒப்புக்கொள்கின்றன. நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியுள்ளவரா இல்லையா என்பதை வங்கி சரிபார்க்கும். நீங்கள் குறைந்தது ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஒரு வருடமாவது வேலை செய்திருக்க வேண்டும்., வங்கி உங்களுக்கு கடன் கொடுக்கும். உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா.. 17000 கிரெடிட் கார்டுகளை ப்ளாக் செய்த வங்கி.. ஏன் தெரியுமா? தனிநபர் கடன் வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள் : உங்கள் தேவையின் அடிப்படையில் தனிநபர் கடன் வாங்கினாலும், சில சமயங்களில் அதை எடுக்காமல் இருப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, விடுமுறை நாட்கள், சுற்றுப்பயணங்கள், பங்குச் சந்தை அல்லது வணிகத்தில் முதலீடு செய்ய தனிநபர் கடனை நீங்கள் எடுக்கக்கூடாது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் நீங்கள் கடன் பெற முடியாது என்று அர்த்தமல்ல. மேலும் நீங்கள் வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் இருந்தாலும் தனிநபர் கடனைப் பெறலாம். கடன் வாங்குவதற்கு முன், நீங்கள் வட்டி விகிதத்தை சரியாக அறிந்து கொள்ள வேண்டும். குறைந்த வட்டி விகிதத்தில் வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கவும். வங்கிக் கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். சேமிப்புக் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் தெரியுமா? மீறினால் அபராதமா? வங்கி உங்களுக்கு கடன் கொடுக்கிறது என்று கடன் வாங்க வேண்டாம். உங்களுக்கு கடன் தேவையா இல்லையா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை உறுதிப்படுத்தவும். கடனுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை தேவை. அதுமட்டுமின்றி, இரண்டு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளும் கேட்கப்படுகின்றன. தனிநபர் கடனுக்கான தகுதி என்ன? : உங்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் வங்கி தகுதியை சரிபார்க்கும். குறைந்தபட்சம் 18 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் இருந்தால் மட்டுமே வங்கிக் கடன் வழங்கப்படும். ஒரு தனிநபருக்கு 750 அல்லது அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோரை வங்கி கட்டாயமாக்குகிறது. முன்கூட்டியே செலுத்தும் தேர்வுகளைப் புரிந்துகொள்வது, தனிநபர் கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான அம்சமாகும். எனவே உங்கள் உங்கள் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்க்கவும். ஏனெனில் சில வங்கிகள் முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கு அபராதம் விதிக்கின்றனர்.

  • அடேங்கப்பா! சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை இத்தனை லட்சமா? 1.887 கிலோ தங்கம்! 2.527 கிலோ வெள்ளி!
    on April 27, 2024 at 3:13 am

    சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 7 நாட்களில் உண்டியல் காணிக்கை 67.80 லட்சம் ரூபாய் ரொக்கம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய  காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர்  கல்யாணி  தலைமையில்  உதவி ஆணையர்கள் முன்னிலையில்  தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள்,  வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.     கடந்த 7 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.67 லட்சத்தி 80 ஆயிரத்து 962  ரூபாய் ரொக்கம், 1.897 கிலோ தங்கம், 2.527 கிலோ வெள்ளி. 59 அயல்நாட்டு நோட்டுகளும், 959 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத்  கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

  • Cheran : சேரன் மகளின் திருமணம்.. மனக்கசப்பை மறந்து வாழ்த்திய பார்த்திபன் – சேரன் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா?
    on April 27, 2024 at 2:57 am

    தமிழ் சினிமாவில் இப்பொது ட்ரெண்டிங்கில் இல்லை என்றாலும் கூட, பார்த்திபன் மற்றும் சேரனின் படங்களுக்கு எப்போது மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உண்டு. ஆனால் இவர்கள் இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு மிக பெரிய மனக்கசப்பு ஏற்பட்டது. மிக பெரிய திறமைசாலி என்றபோதும், சற்றும் யோசிக்காமல் ஒருவர் மனதை புண்படும்படி பேசிவிடுவார் சேரன் என்று பகிரங்கமாக ஒரு பேட்டியில் பேசியிருந்தார் இயக்குனர் பார்த்திபன்.  மனக்கசப்பு ஏற்பட காரணம் என்ன? இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சேரன், முதல் முறையாக கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குனராக களமிறங்கினார். அப்பொழுது அவருடைய திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் பார்த்திபன். “பாரதி கண்ணம்மா” என்கின்ற அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  Ninaithen Vanthaai: அஞ்சலியை பார்க்க ஓடிவந்த சுடர்.. அலேக்காக கடத்திய வேலு – நினைத்தேன் வந்தாய் அப்டேட்! அதன் பிறகு கடந்த 2000வது ஆண்டு “வெற்றி கொடி கட்டு” என்கின்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் இயக்குனர் சேரன். அந்த திரைப்படம் தான் பார்த்திபன் மற்றும் சேரன் இணைந்து பயணித்த கடைசி திரைப்படம். பொதுவாக பார்த்திபன் மற்றும் முரளியை வைத்து தான் அதிக திரைப்படங்களை சேரன் இயக்கியிருக்கிறார்.  “வெற்றி கொடி கட்டு” திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் முரளி ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள். ஆனால் அந்த கதையின் ஓட்டம் மிகவும் சீரியசாக இருப்பதால் இடையில் கொஞ்சம் காமெடிக்காக வேறு ஒரு திரைப்படத்திற்காக, தானும் வடிவேலும் எழுதி வைத்திருந்த நகைச்சுவை காட்சிகளை அதில் சேர்த்துக்கொள்வதாக சேரனிடம் கூறியுள்ளார் பார்த்திபன்.  ஆனால் அப்படி செய்தால், எங்கு பார்த்திபனுக்கு பெயர் சென்று விடுமோ? என்று எண்ணி அதை சேரன் முதலில் மறுக்க, பின் வடிவேலுவும் பார்த்திபனும் இணைந்து பேசி அவரை ஒப்புகொள்ளவைத்ததாக பார்த்திபன் ஒரு இடத்தில் கூறியுள்ளார்? என்று சொல்லப்படுகிறது. படம் வெளியான பின்பு அந்த திரைப்படத்திற்காக சேரனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.  அப்போது ஒரு பட விழாவில் பங்கேற்ற சேரன், நான் அண்மையில் ஒரு குப்பை படம் ஒன்றை பார்த்தேன், அது பார்த்திபன் படமாக இருக்குமோ? என்று எண்ணினேன் என்று சேரன் பேசியதாக கூறப்படுகிறது. இதில் மிகப்பெரிய மனக்கசப்பை இருவரும் சந்திக்க, சில வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன், சேரன் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் சற்றும் யோசிக்காமல் பிறருடைய மனங்களை நோகடிப்பதில் அவர் வல்லவர் என்று கூறியிருந்தார்.  சேரன் கொடுத்த பதில்  இந்த மனக்கசப்பு பல வருடங்கள் நீடித்தது, ஆனால் சேரன் அதை மறுத்தார், எப்போது நான் ஒரு படத்தை குப்பை படம் என்று கூறினேன் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது பார்த்திபன் படமாக இருக்காது. அவர் சிறந்த இயக்குனர் என்று பார்த்திபனை புகழ்ந்தார் சேரன். சேரன் மகளின் திருமணம். இயக்குனர் சேரனுக்கும், செல்வராணி என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில் அந்த தம்பதிக்கு நிவேதா மற்றும் தாமினி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுரேஷ் ஆதித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. சேரனின் குருநாதர் கே.எஸ். ரவிக்குமார் திருமணம நிகழ்வில் பங்கேற்று தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  மணமக்களுக்கு வாழ்த்துகள்! — Radhakrishnan Parthiban (@rparthiepan) April 23, 2024 திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் வந்து தங்கள் வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்தனர். இந்நிலையில் மனக்கசப்பு பெரிய அளவில் இருந்தாலும், நேரில் வரமுடியாத நிலையில், சேரன் மகளின் திருமணத்திற்கு தனது வாழ்த்துக்கள் இயக்குனர் பார்த்திபன் தன் “எக்ஸ்” பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார். அதற்கு மகிழ்ச்சியும், நன்றியும் சார் என்று கூறி தனது நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சேரன். மனக்கசப்புகள் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும், இந்த இரு இயக்குனர்களுக்கும் தமிழ் சினிமாவின் மகுடங்கள் என்பதை அவர்களின் படங்கள் காலம் கடந்தும் பேசும்.  பின்னணி இசையே இல்லாத தமிழ் படம் ‘டிராக்டர்’! 14வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு தேர்வு!

  • #BREAKING: சினிமா பாணியில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. 20 பேர் படுகாயம்..!
    on April 27, 2024 at 2:12 am

    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாகர்கோயிலில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் சென்னைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குமார் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார். இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் வந்துக்கொண்டிருந்தது.  தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் போதிய அறிவிப்பு பலகையும் இல்லாததால் சர்வீஸ் சாலையில் சென்ற பேருந்து சாலையின் தடுப்பு கட்டையில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் ஓட்டுனர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையும் படிங்க: சென்னையில் இன்று முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • என்னை பார்த்து குழந்தை பெத்துக்க முடியாதவன் என தந்தை திட்டியதால் கொன்றேன்.. மகன் பகீர் வாக்குமூலம்!
    on April 27, 2024 at 1:44 am

    குமரியில், ரூ.4 லட்சம் பேரம் பேசி ஆட்களை ஏவி தந்தையை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசில் மகன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை வாட்டர் டேங்க்ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (65). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி காலையில் இவர் பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அங்கிருந்து சிறிது தூரத்தில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தந்தைக்கு வலிப்பு நோய் இருப்பதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்திருக்கலாம் ஆகையால் இதுதொடர்பாக போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டாம் என மருத்துவ ஊழியர்களிடம் மகன் கூறியதால் அவர்களும் தெரிவிக்கவில்லை.   இதையும் படிங்க: என்னுடன் பழகாத நீ வேறு யாருடனும் இனி பழகக்கூடாது! செத்து போ! கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்! ஆனால், கடந்த 12ம் தேதி சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார். முதலில் அனீஷ்குமார் கூறியபடி போலீசில் தகவல் தெரிவிக்காத ஊழியர்கள், பிரபாகரன் உயிரிழந்ததால் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  முதலில் மகன் கூறியடி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பிரபாகரன் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனையில் அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரபாகரனின் தலையில் வெட்டு காயம் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனீஷ்குமார் உள்பட 3 பேர் வசமாக சிக்கினர். அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பிரபாகரனை கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து அனீஷ்குமார், ராஜா (25), சுதன் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதையும் படிங்க: தலைக்கேறிய கஞ்சா போதை! ரோட்ல போறவங்க வரவங்களை வெட்டிய இளைஞர்கள்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..! அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதில், டிப்ளமோ முடித்த நான் சமையல் அறைக்கு கப்போடு செய்து கொடுக்கும் பணி செய்து வந்தேன். கடந்த 2019-ம் ஆண்டு அனுஷா என்பவரை மணந்தேன். பின்னர் திருமணமாகி 4 வருடங்களாகியும் குழந்தை இல்லை. அப்போது தந்தை பிரபாகரன், குழந்தை பெத்துக்க முடியாதவன், வாய் பேசுறான் பார் என என்னை திட்டியதால் ஆத்திரத்தில் இருந்தேன்.  ஆகையால் ஆட்களை ஏவி தந்தையை கொலை செய்தேன் என்றார். 

  • சென்னையில் இன்று முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
    on April 27, 2024 at 1:01 am

    தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் இன்று முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும். * வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ்) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். * பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். * தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். * சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். * தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

  • Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஏப்ரல் 27, 2024, சனிக்கிழமை…
    on April 27, 2024 at 12:45 am

    பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம். நாள் : குரோதி ஆண்டு, சித்திரை 14. ஆங்கில தேதி : 27.04.2024. கிழமை : சனிக்கிழமை. நாள் : சமநோக்கு நாள் பிறை : தேய்பிறை திதி : இன்று காலை 8.18 வரை திருதியை , பின்னர் சதுர்த்தி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.28  வரை கேட்டை, பின்னர் மூலம் . நாமயோகம் : இன்று அதிகாலை 3.23 வரை பரிகம், பின்னர் சிவம். கரணம் : இன்று காலை 8.18 வரை பத்தரை, பின்னர் இரவு 8.03 வரை பவம், அதன்பின்னர் பாலவம். அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 4.28 வரை சித்தயோகம், பின்னர் மரணயோகம் Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!! நல்ல நேரம் : காலை: 7.30 முதல் 8.30 வரை மாலை: 4.30 முதல் 5.30 வரை இரவு: 9.30 முதல் 10.30 வரை எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் : ராகுகாலம் : காலை 9.00  முதல் 10.30 வரை எமகண்டம் : பகல் 1.30 முதல் 3.00 வரை குளிகை : காலை 6.00 முதல் 7.30 வரை சூலம் : கிழக்கு. பரிகாரம் : தயிர். Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

  • Today Rasi Palan 27th April 2024 : இன்றைய ராசிபலன்கள்.. 12 ராசிக்கும் நல்ல நாளா..? பாதகமான நாள் யாருக்கு?
    on April 27, 2024 at 12:00 am

    Today Rasi Palan : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்க்கலாம். மேஷம்: இந்த கட்டத்தில் கிரக நிலைகள் ஓரளவு நன்மை தரும் சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஏமாந்து போகும் வாய்ப்பு உண்டு.   ரிஷபம்: ஆபத்தான பணிகளில் இருந்து விலகி இருங்கள். இழப்பைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. நெருங்கிய உறவினர்களுடனும் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.   மிதுனம்: இன்று எந்த விதமான பயணத்தையும் தவிர்க்கவும். மேலும் கடின உழைப்பும், துறையில் சில மாற்றங்களும் தேவை.   கடகம்: மற்றவர்களை நம்புவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே எதிர்காலத்தைத் திட்டமிடும்போது மற்றவர்களை விட உங்கள் சொந்த முடிவுக்கு முன்னுரிமை கொடுங்கள்.   சிம்மம்: தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் உங்கள் அபிப்ராயமும் நற்பெயரும் களங்கமடையலாம்.   கன்னி: இன்று உங்களுக்காக சிறிது நேரம் செலவிட வேண்டும். பொருளாதார ரீதியாக இன்று உங்களுக்கு வெற்றியைத் தரும். துலாம்: கேட்காமல் யாருக்கும் அறிவுரை சொல்லக் கூடாது.இன்று பணியிடத்தில் குறைந்த நேரத்தையே செலவிடுவீர்கள்.  விருச்சிகம்: சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் இருந்து வந்த தவறான புரிதல் இன்று யாரோ ஒருவரின் தலையீட்டால் தீரும்.  தனுசு: கடந்த சில வருடங்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணம் கிடைக்கும்.   மகரம்: இன்று குடும்பத்தில் இருந்த சிறு பிரச்சனைகள் நீங்கி வீட்டில் அமைதி  நிலவும். வியாபார நடவடிக்கைகள் தற்போது மந்தமாக இருக்கலாம்.    கும்பம்: இன்று நீங்கள் பல வகையான செயல்களில் ஈடுபடலாம். நிலம், வாகனம் போன்றவற்றை வாங்குவதன் மூலம் கடன் வாங்கலாம்.    மீனம்: எந்தவொரு கடினமான பணியையும் கடின உழைப்பின் மூலம் தீர்க்கும் திறன் பெறுவீர்கள். உங்கள் ஈகோ மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துவது முக்கியம்.

  • ராம் சரணின் மகள் க்ளின் காரா ஜாதகத்தை கணித்து கூறிய ஜோதிடர் வேணு சுவாமி! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் ஏன்?
    on April 26, 2024 at 6:18 pm

    மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பேரக்  குழந்தையும், ராம் சரண் – உபாசனா தம்பதியின் மகளுமான க்ளின்  காரா ஜாதகத்தை பிரபல ஜோதிடர் வேணு சுவாமி கணித்து கூறியதை தொடர்ந்து அவரை டோலிவுட் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.   பல பிரபலங்களின் ஜாதகத்தை கணித்து கூறி… சோசியல் மீடியாவில் பிரபலமாகியுள்ள வேணு சுவாமி ராம் சரண் மகள் குறித்து கூறிய கருத்துக்கு டோலிவுட் ரசிகர்கள் பலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.   ராம் சரண் – உபாசனா தம்பதி, திருமணமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். டிசம்பர் 2022 இல் உபாசனா தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். பல வருடங்களுக்கு பின் உபாசனா கர்ப்பமான தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். Jyotika: ஜோதிகாவின் நடத்தை சரி இல்லை! ஓவராக பேசிய பயில்வான்… வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்!    அதே நேரம் தாமதமாக குழந்தை பெற்று கொள்வது கூட ஏற்கனவே நாங்க முடிவு செய்த ஒன்று தான் என கூறினார் உபாசனா. மேலும் உபாசனா தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைத்து அதன் மூலமே குழந்தை பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் பரவின.    இதை தொடர்ந்து கடந்த 2023 ஜூன் 20 ஆம் தேதி இரவு, உபாசனா தன்னுடைய மகளை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த தினத்தை ஒரு கொண்டாட்டமாகவே கொண்டாடியது சிரஞ்சீவியின் குடும்பம். அதே போல் மருத்துவமனையில் இருந்த உபாசனாவை பல பிரபலங்கள் வந்து பார்த்தனர்.  Shruti Haasan: லவ் பிரேக்கப் சர்ச்சைக்கு நடுவே… ரணகள கவர்ச்சியில் ஹாட் போட்டோசை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!   ஜோதிடர் வேணு சுவாமி ராம் சரண் மகள் க்ளின் காரா ஜாதகத்தை கணித்து… அவர் மஹத் ஜாதகத்தில் பிறந்தவர் எனவே மகாராணியாக வாழும் அம்சம் கொண்டவர் என கூறியதை தொடர்ந்து பலர், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தையின் ஜாதகத்தை எப்படி நீங்கள் கணித்து கூறுவீர்கள் என இவரை திட்டி தீர்க்க துவங்கினர்.   இதற்க்கு வேணு சுவாமி… அந்த காலங்களில் ராஜாக்களுக்கும், இளவரசர்களுக்கும் குழந்தைகள் பிறந்தால் முதலில் அந்த குழந்தை ஜாதகத்தை கணித்து நாட்டின் வலம் எப்படி இருக்கும் என கணிப்பார்கள் அப்படி இருக்கும் போது… நான் கணிதத்தில் என தவறு என பதில் கொடுத்துள்ளார். 10 வருட தவம்.. 2 அபார்ஷன்! 42 வயதில் கர்ப்பமாக உள்ளதை அறிவித்த சீரியல் நடிகை ஜூலி! குவியும் ரசிகர்கள் வாழ்த்து   உண்மையில் பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளின் ஜாதகத்தை தான் பிறந்த உடனே சொல்லக் கூடாது. பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளுக்கு 7 வயதுக்குள் பிரகண்டம் இருந்தால் ஜாதகத்தைச் சொல்லக்கூடாது என்கிறது சாஸ்திரம். மேலும் சில நக்ஷத்திரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு 7வது நாள், 7வது மாதம், 7வது வருடம், 17வது, 37வது மற்றும் 77வது வருடங்களில் பிரகண்டம் இருக்கும். என கூறி உள்ளார். இந்த தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ஜம்முவின் ரம்பனில் மூழ்கிய நிலம்.. வீடுகளில் ஏற்பட்ட விரிசல்.. சாலை இணைப்பு துண்டிப்பு..!
    on April 26, 2024 at 6:16 pm

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பான் மாவட்டத்தில் நிலம் மூழ்கியதால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நான்கு மின் கோபுரங்கள் சேதமடைந்தன. மேலும் ஒரு முக்கிய சாலை சேதமடைந்தது. மாவட்ட தலைமையகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெர்னோட் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. துணை கமிஷனர் பசீர்-உல்-ஹக் சவுத்ரி வெள்ளிக்கிழமை அதிகாலை பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார். வியாழன் மாலை வீடுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியபோது நிலைமை அதிகரித்தது, மேலும் பெர்னோட் கிராமத்தில் நிலம் மூழ்கியதால் கூல் மற்றும் ரம்பன் இடையேயான முக்கியமான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், நிலம் மூழ்கியதற்கான காரணத்தைக் கண்டறிய புவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மாவட்ட அதிகாரிகளின் அர்ப்பணிப்புக் குழு மறுவாழ்வு முயற்சிகள் மற்றும் இன்றியமையாத சேவைகளை மீட்டெடுப்பதை மேற்பார்வையிட அனுப்பப்பட்டுள்ளது. “நிலம் தொடர்ந்து மூழ்கி வருகிறது. ஆனால் எங்கள் உடனடி கவனம் சாலை அணுகல் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீண்டும் நிலைநிறுத்துகிறது. நாங்கள் தீவிரமாக கூடாரங்கள் மற்றும் பிற அத்தியாவசியங்களை விநியோகிக்கிறோம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்கிறோம்,” என்று துணை ஆணையர் சவுத்ரி உறுதியளித்தார். உள்ளூர் தன்னார்வத் தொண்டர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட நபர்களின் உடைமைகளை சேதமடைந்த வீடுகளில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உதவுவதற்காக திரண்டனர். விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

  • Relationship Tips : உங்கள் உறவுகள் வலுவாக இருக்க முதலில் ‘இந்த’ பழக்கங்களுக்கு குட் பை சொல்லுங்கள்!
    on April 26, 2024 at 6:00 pm

    மனித வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்கது என்னவென்றால், அது உறவுகள் சில. அவர்கள் ஒவ்வொரு அடியிலும் ஆதரிக்கிறார்கள் மற்றும் ஊக்குவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, பெற்றோர், உடன்பிறந்தவர்கள், கணவன்-மனைவி, நட்பு போன்ற உறவுகள்.. ஆனால் சில சமயங்களில் சில சிறிய விஷயங்கள் அல்லது நமது நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அந்த உறவுகளில் விரிசல் வர வாய்ப்பு அதிகம். பல சமயங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அந்த உறவுகளை உடைக்கிறது. பின்னர் விரும்பிய பிணைப்புகளை பராமரிப்பது கடினமாகிறது. நமது நடத்தை நம் அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்துகிறது. ஏனென்றால், பல சமயங்களில் நாம் மற்றவர்களிடம் புண்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லிவிடுவோம் அல்லது மோசமாக உணரும் வகையில் நடந்து கொள்கிறோம். காலப்போக்கில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாவிட்டால், உறவுகளுக்கு இடையிலான விரிசல் ஆழமடையும். இதுபோன்ற தவறுகளை நீங்கள் செய்தால், உடனடியாக அவற்றை மாற்றிவிடுங்கள். அதுதான் நல்லது. அந்தவகையில் இந்த கட்டுரையில், உங்கள் உறவுகள் வலுவாக இருக்க நீங்கள் விரும்பினால், முதலில் உங்களிடம் இருக்கும் இந்த பழக்கங்களை விட்டுவிடுங்கள். அவை.. உறவுகள் வலுவாக இருக்க என்ன விட வேண்டிய பழக்கங்கள்: பொறுப்புகளில் இருந்து ஓடுவது: பலர் தங்கள் பொறுப்புகளை விட்டு ஓடிவிடுகிறார்கள் அல்லது மற்றவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இது உறவில் விரிசலை ஏற்படுத்தும். உதாரணமாக, கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால், வீட்டு பொறுப்புகளை பிரிக்க வேண்டும். திருமண உறவு மகிழ்ச்சியாக இருக்க கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப்போடுவது அல்லது ஓடிப்போனாலோ கணவன்-மனைவிக்குள் தகராறு அதிகரிக்கும். இதன் காரணமாக, உறவு படிப்படியாக விரிவடையத் தொடங்கிவிடும். வாதாடுவது: யாருடைய பேச்சையும் கேட்காத பழக்கம் பலருக்கு உண்டு. உறவில் இப்படி இருந்தால் விரிசல் வரும். எதிர்தரப்பினரின் பேச்சைக் கேட்காமல் ஒவ்வொரு முறையும் நீங்கள் வாதிட்டால், அது அவர்களை காயப்படுத்தலாம். எனவே, நீங்கள் வாக்குவாதம் செய்யாமல் எதிர்தரப்பினர் பேசுவதை முதலில் கேளுங்கள். அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவமானம்: தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், சிலர் மற்றவர் செய்யும் அந்த தவறை மனதில் வைத்து பிறர் முன் அவரை  அவமானப்படுத்துகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் உறவுகளுக்கிடையேயான தூரம் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே உறவு மதிப்புக்குரியதாக இருந்தால் பழைய விஷயங்களை உடனே மறப்பது தான் நல்லது. குறிப்பாக, மற்றவரை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். மரியாதை: எந்தவொரு உறவிலும் மரியாதை ரொம்ப ரொம்ப முக்கியமானது. பல சமயங்களில் சிலர் வேண்டுமென்றே அல்லது நகைச்சுவையாக மற்றவரிடம் எதையாவது சொல்லிவிடுவார்கள். ஆனால், அது அவர்களை  காயப்படுத்தும் என்று கூட அவர்கள் யோசிப்பதில்லை. எனவே, எக்காரணம் கொண்டும் பிறரை அவமதிக்காதீர்கள். இல்லையெனில், உறவில் விரிசல் வரும். சின்ன சின்ன விஷயங்களில் கோபம்: பிடிக்காத விஷயத்திற்கு கோபம் வருவது இயற்கையானது. ஆனால் சிலருக்கு சின்ன சின்ன விஷயத்துக்கே கோபம் வரும். ஆனால், தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும், ஒருவர் சொன்னது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், முதலில் மற்றவருக்கு மெதுவாக விளக்கலாம். அவர்களிடம் பேசி பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்.

  • லோக்சபா தேர்தல் 2024: 60.96% வாக்குகள் பதிவு.. மாநில வாரியான விவரங்கள்.. முழு விபரம் இதோ !!
    on April 26, 2024 at 5:49 pm

    18வது மக்களவைத் தேர்தலில் 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) முடிவடைந்தது, பல்வேறு பிராந்தியங்களில் 1,200க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இன்று மாலை 7 மணி நிலவரப்படி, தோராயமாக 60.96% வாக்குகள் பதிவாகியுள்ளன. 18வது மக்களவைத் தேர்தலில் 2-வது கட்டத்தில் 13 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று மாலை 7 மணி நிலவரப்படி ஒட்டுமொத்த தோராயமான வாக்குப்பதிவு 60. 96%. முதல் இரண்டு கட்டங்களில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இப்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Peaceful polling across 13 States/UTs in phase 2 of #GeneralElections2024 ; overall approximate voter turnout of 60. 96 % as of 7 PM today Polling is now complete in 14 States/UTs in the first two phases Details : https://t.co/QXPFpmuD1T pic.twitter.com/lfb1lsGCxg — Spokesperson ECI (@SpokespersonECI) April 26, 2024 #InkWaliSelfie Renowned international cricketer Mr. Anil Kumble, along with his family, cast their votes & celebrated #ChunavKaParv ✨ Time for you to Click #InkWaliSelfie and tag us before the end of #Phase2 ⏱️#DeshKaGarv #Elections2024 #LokSabhaElections2024#ECI pic.twitter.com/XoDdkGlSrg — Election Commission of India (@ECISVEEP) April 26, 2024 Our happy Bru voters from Karbook,Gomati District.@ceotripura @DmGomati @ECISVEEP pic.twitter.com/JAcBV0H80h — District Election Officer, GOMATI, Tripura (@DeoGomati22) April 26, 2024 Glimpses of #Phase2 voting for #GeneralElections2024 Longer queues and enthusiastic voters, the celebration of #ChunavKaParv in full swing✨#DeshKaGarv pic.twitter.com/vB3TDr7Hk8 — Election Commission of India (@ECISVEEP) April 26, 2024 Vote By Boat ! Anchoring the choice : Voters of 44/68 Raima Valley AS remote area of Dhalai district, #Tripura are coming to cast their votes by using boats. 📸 @ceotripura #Phase2 #GeneralElections2024 #ChunavKaParv #DeshKaGarv pic.twitter.com/ZcPXqFFIgo — Election Commission of India (@ECISVEEP) April 26, 2024 கேரளாவில் 20 இடங்கள், கர்நாடகாவில் 14 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 8 இடங்கள், மத்தியப் பிரதேசத்தில் 7 இடங்கள், அசாம் மற்றும் பீகாரில் தலா 5 இடங்கள் என அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கூடுதலாக, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3 இடங்களும், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தலா 1 இடங்களும் இந்த கட்டத்தில் பங்களித்தன. Phase Two has been too good! Gratitude to the people across India who have voted today. The unparalleled support for NDA is going to disappoint the Opposition even more. Voters want NDA’s good governance. Youth and women voters are powering the strong NDA support. — Narendra Modi (@narendramodi) April 26, 2024 நாடு முழுவதும் 2-ம் கட்ட பொதுத்தேர்தலில் வாக்களித்த நிலையில், இன்று வாக்களித்த அனைவருக்கும் தனது நன்றியை எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார். “இன்று வாக்களித்த இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது. வாக்காளர்கள் என்.டி.ஏ-வின் நல்லாட்சியை விரும்புகிறார்கள். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் வலுவான என்.டி.ஏ. ஆதரவை வலுப்படுத்துகிறார்கள்” என்று பிரதமர் மோடி தனது X இல் மேலும் கூறினார்.  Capturing the spirit of democracy: Join the celebration and festivities as voters unite to cast their vote in General Elections 2024.🙌 Celebrate #ChunavKaParv and #GoVote ✨#YouAreTheOne #DeshKaGarv #Elections2024 #IVote4Sure #GeneralElection2024 pic.twitter.com/x0cOuwGOKP — Election Commission of India (@ECISVEEP) April 26, 2024 Peaceful polling across 13 States/UTs in phase 2 of #GeneralElections2024 ; overall approximate voter turnout of 60. 96 % as of 7 PM today Polling is now complete in 14 States/UTs in the first two phases Details : https://t.co/QXPFpmuD1T pic.twitter.com/lfb1lsGCxg — Spokesperson ECI (@SpokespersonECI) April 26, 2024 மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் தேஜஸ்வி சூர்யா, நடிகர்கள் ஹேமமாலினி, அருண்கோவில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் இந்த 2ம் கட்டத்தில் குறிப்பிடத்தக்க போட்டியாளர்களாக உள்ளனர். தேர்தல் பணியின் போது, சர்ச்சைக்குரிய சம்பவங்கள் எழுந்தன. பாஜக எம்பியும் பெங்களூரு தெற்கு வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யா மீது ட்விட்டரில் வீடியோ மூலம் மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், டார்ஜிலிங்கில் இருந்து பாஜக வேட்பாளர் ராஜு பிஸ்டா சோப்ராவில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டினார், இதனால் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. டார்ஜிலிங் தொகுதியில் முறையே பாஜக மற்றும் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களான ராஜு பிஸ்டா மற்றும் டாக்டர் முனிஷ் தமாங் ஆகியோர், தொழில் காரணங்களுக்காக டெல்லியில் நீண்ட காலமாக தங்கியிருந்ததால், வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டதால், தங்களுக்கு வாக்களிக்க முடியவில்லை. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 2 ஆம் கட்டத்திற்கான மாநில வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கை இரவு 9 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அசாம் – 70.68% பீகார் – 54.91% சத்தீஸ்கர் – 73.19% ஜம்மு காஷ்மீர் – 71.63% கர்நாடகா – 67.45% கேரளா – 65.34% மத்திய பிரதேசம் – 56.76% மகாராஷ்டிரா – 54.34% மணிப்பூர் – 77.18% ராஜஸ்தான் – 63.93% திரிபுரா – 78.63% உத்தரப் பிரதேசம் – 54.83% மேற்கு வங்காளம் – 71.84%. விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

  • பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. சாதித்து காட்டிய தென்காசி இளம்பெண்..
    on April 26, 2024 at 5:29 pm

    மத்திய அரசு தேர்வாணயம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமை பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த இன்பா வெற்றி பெற்றுள்ளார்.  இன்பாவின் தந்தை பேருந்து நடத்துனராக இருந்து ஓய்வு பெற்றவர். தாய் பீடி சுற்றும் தொழிலாளியாக இருக்கிறார். மிக சாதாரண பின்புலத்தில் இருந்து வந்த இன்பா, செங்கோட்டை தாலுகாவில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  தமிழ்நாட்டில் இந்த நாட்களில் வெப்ப அலை உச்சத்தில் இருக்கும்.. பேட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்.. செங்கோட்டையில் இருந்தே தான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்ததாகவும், தனது படிப்பிற்கு செங்கோட்டை நூலகம் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் கூறியுள்ளார். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நூலகத்தில் பல வசதிகள் செய்து கொடுத்ததாகவும் கூறி உள்ளார்.  பின்னர் சிவில் சர்வீஸின் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற உடன், தமிழக அரசின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் தனக்கு முதன்மை தேர்வில் பங்கேற்கு ரூ.25000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் கூறினார். இதன் மூலம் சென்னையில் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற பிறகு நேர்முக தேர்வுக்கு தான் தயாராகி வந்ததாகவும் கூறி உள்ளார்.  தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வை கண்டு அஞ்சாமல், தொடர்ந்து முயற்சி எடுத்து படித்தால் வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. சர்ச்சையில் சிக்குமா முதல்வர் பயணம்.? சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இன்பாவுக்கு செங்கோட்டை நூலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் இன்பாவை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அவருக்கு பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னை போன்ற கிராமப்புற மாணவர்களும் குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்பதை  நிரூபித்துள்ளார் இன்பா. 

  • பின்னணி இசையே இல்லாத தமிழ் படம் ‘டிராக்டர்’! 14வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு தேர்வு!
    on April 26, 2024 at 5:20 pm

    “டிராக்டர்” என்ற திரைப்படம்  வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் அர்த்தமுள்ள விவாதங்களை எழுப்பவும் மற்றும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் ஜெயந்தன் தனது ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) மூலமாக திரைப்படத் தயாரிப்பில் முதல் முயற்சியாக தயாரித்த படம் டிராக்டர். ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் இந்தியாவில் உருவாகும் அனைத்து மொழி திரைப்படங்களையும்  பிரான்சில் உள்ள திரையரங்கு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெயிலர் ஜவான் முதல் லியோ வரை அனைத்து மொழி திரைப்படங்களையும் பிரான்சில் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்பட குழுவினர் பெரும்பாலும் அறிமுக கலைஞர்கள். இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால்  அறியப்பெற்றவர் மற்றும் அவர் சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதுகலை மாணவர் ஆவார். இது அவரது முதல் திரைப்படம் மற்றும் அவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து வந்தவர். இயக்குனரைப்போலவே இந்தப் படத்தின் நாயகன் பிரபாகரன் ஜெயராமன் மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப் இருவரும் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் இருவரும் திரைப்படத்திற்கு புது முகங்கள். துணை கதாபாத்திரத்தில் பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி மற்றும் இயக்குனர் ராம்சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் முத்துசாமி, பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் உதவியாளர், சுதர்சன் படத்தொகுப்பாளராகவும், ஒலி வடிவமைப்பை ராஜேஷ் சசீந்திரன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை பிரபல கலை இயக்குனர் டி.முத்துராஜ் செய்துள்ளார்கள். இந்த டிராக்டர் திரைப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்க சாதனையாகும். டிராக்டர்  படத்தின் உருவாக்கத்திற்கு  பின்னால் இருக்கும் திரைப்பட குழுவின்  திறமை மற்றும் உழைப்புக்கு இது ஒரு சான்று. இந்த அங்கீகாரம் டிராக்டர் திரைப்படத்தை   பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் மேலும் சில வெற்றிகளை தொடவும் நிச்சயமாக அதிக வாய்ப்புகளைத் ஏற்படுத்தும். இந்த திரைப்பட குழுவினர் சர்வதேச பிரீமியர் அந்தஸ்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவின் சந்தைப் பிரிவுக்குச் செல்லவும், மேலும்  பாரிஸில்  வாழும் தமிழர்களுக்காக  ஒரு சிறப்பு திரையிடல் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

  • மாலத்தீவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் செல்லவில்லை.. தவறான தகவல்.. மறுப்பு தெரிவித்து விளக்கம்..!
    on April 26, 2024 at 5:18 pm

    2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடம் பிடித்தது. இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக விமர்சித்ததை தொடர்ந்து இந்தியர்கள், மாலத்தீவை புறக்கணித்தனர். இதனை அடுத்து ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், “முதலமைச்சர் மாலத்தீவு செல்கிறார் என்பது பொய் செய்தி. பிரதான ஊடகங்கள்  தங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வரும் தகவல்களை முறையான வழிகளில் உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது. விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

பிரேக்கிங் நியூஸ், விளையாட்டு, டிவி, ரேடியோ மற்றும் பல. சர்வதேச செய்திகள் முதல் தேசியச் செய்திகள், அரசியல் முதல் சமூகம், பாதுகாப்பு முதல் தற்போதைய விவகாரங்கள், தொழில்நுட்பச் செய்திகள் முதல் பொழுதுபோக்குச் செய்திகள் வரை உள்ளடக்கிய IOB செய்தி வலையமைப்பு, ஒவ்வொரு செய்தி கவரேஜும் பாரபட்சமற்றது, அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்யப்பட்டது, நம்பகமானது மற்றும் நம்பகமானது. IOB நியூஸ் நெட்வொர்க் தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு – நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் வயது என்னவாக இருந்தாலும்.